Thursday, 22 June 2017

மீண்டும் வருவோம்

மீண்டும் வருவோம்
__________________
மரத்தை அழித்த வீணர்களே
எங்கள் கதையை கேளுங்கள்
நீங்கள் போட்ட விதையல்ல நாங்கள்
இறைவன் படைத்த உயிர்கள் நாங்கள்
எங்களை அழித்திட நீங்கள் யாரு
விதைப் போட்டு வளர்க்க துப்பில்லை
வளர்ந்த எங்களை காக்க துணிவில்லை
தண்ணீர் ஊற்றக் கூட ஆளில்லை
எங்கள் உயிரை எடுக்க
உமக்கு உரிமையும் இல்லை
நீங்கள் வெட்டினால் நாங்கள் துளிர்ப்போம்
வேர் அறுத்தால் விதை ஆவோம்
எங்களை காக்க முடியவில்லை
நாங்கள் காக்கின்றோம் பல உயிர்களை
எங்களுக்கு இடம் ஒதுக்க மறுத்தீரே
எங்கள் மீது கட்டிய
பறவைகளின் கூடுகளை பாருங்கள்
எங்களை அழித்தீர்களே
பல இன்னல்களை சந்தித்தீரோ
நாங்கள் மீண்டு மீண்டும் வருவோம்
வேரை மட்டும் சிதைக்காதீர்
துன்பப்பட்டது போதும்
இனியும் நீங்கள் துன்பப்பட வேண்டுமா
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment