இரவின் மடியில்
- - - - - - - - - - - - - -
அம்மா என்றும் நான் உன் பிள்ளை
இதை மறுத்திட யாருக்கும் உரிமையில்லை
பாசம் ஊட்டி வளர்த்தாய்
மடியில் தூங்க வைத்தாய்
மடியின்றி எனக்கு தூக்கமில்லை
கல் கூட உன் மடியானது
சுகமாய் நான் உறங்குகின்றேன்
தாலாட்டுப் பாட ஆளில்லை
நீயோ கல்லறையில் உறங்குகின்றாய்
____________________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment