உன்னால் விழிகளில் வழிந்தோடும் - -
- - - - குடையில்லாது மனம் நனைகிறது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
உன்னால் விழிகளில் வழிந்தோடும்
கண்ணீரைத் துடைக்க ஆளில்லை
உயிராய் இருந்த எனக்கு
நீ கொடுத்தப் பரிசு கண்ணீர்
சிவந்த கண்கள் மட்டுமே இருக்க
வறண்ட மனம் அழுகிறது
நெஞ்சில் சுமந்தேன் உன்னை
எட்டி உதைத்தாய்
சுக்கு நூறாகிப் போனது இதயம்
மனதில் நினைத்த என்னை
மணி கணக்கில் காக்க வைத்தாய்
நெஞ்சம் பதறுகிறது
கண்ணால் கவர்ந்தேன் என்றாய்
கண்டும் காணாமலும் செல்கிறாய்
இதயத்தில் குடியிருந்தேன் என்றாய்
அம்புகளால் குத்திக் கிழித்திட்டாய்
மலரே எனக் கொஞ்சினாய்
மலரை காலில் மிதித்துச் செல்கிறாய்
என்ன நான் செய்தேன்
ஏன் இந்த தண்டனைகள்
மனதில் சுமந்தது குற்றமா
உன் நினைவாலே வாழ்ந்தது தவறா
விடை தெரியாமல் விழிக்கின்றேன்
குடையில்லாமல் மனம் அழுகிறது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment