விருட்சம் கொண்ட விதைகள்
விடியலின்றி வாழாது
விருந்தோம்பிய தமிழர்கள்
விரும்பியே ஈன்றிடுவார்கள்
விதைகள் விளைந்தால் விருட்சமாகும்
தமிழரின் பண்பாடாய் தழைத்தோங்கும்
உயிர்கள் பல வாழ்ந்திடும்
உலகமே போற்றிடும்
விடியலைத் தாங்கி வளரும்
விலை மட்டும் போகாது
விண்ணைத் தாண்டி வளரும்
விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமாகும்
விருந்தோம்பல் சால சிறந்தது
பாரம்பரியம் பார்க்க பழையது
பண்பாடு அதனுடன் கலந்தது
பரிசுத்தமான அன்பால் உருவானது
உண்ண உணவு கொடுப்பது
இறைவன் கொடுத்த வரம்
உணவின்றி கையேந்துவது
கடவுள் கொடுத்த சாபமில்லை
நீ செய்த பாவத்தின் வினை
உலகின் சிறந்த மொழி எம்மொழி
சிறந்த மனிதர்கள் எங்கள் குலத்தினர்
தமிழனாய் பிறந்திட தவம் செய்திட வேண்டுமே
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Sunday, 18 June 2017
விதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment