புத்தாடை அணிந்தே
புது மலராய் வருகிறாள்
அவளை பார்த்த அந்த நொடியே
புத்தாண்டின் தொடக்கம் எனக்கு
கண்களின் காட்சிக்கு மலரவள்
மனதின் கனவுக்கு தேன் அவள்
மழையோ பொழியவில்லை
வெப்பமோ குறையவில்லை
நீ வந்த நேரமடி
எனக்கு மட்டும் மழை பொழியுதடி
குளிர் காற்று இதமாய் வீசுதடி
மயில் போல வந்தாயே
குயில் போல இசைத்தாயே
மான் போல துள்ளினாயே
என் மனதை பிரமிக்க வைத்தாயே
இடையில் என்ன
உடையின் மாற்றம்
மனதில் தெரியும்
இளமையின் சீற்றம்
இளமைகள் கூட்டு சேர
முதுமைகள் அடித்தளம் அமைக்க
மலரும் வண்டும்
இணையும் நேரம்
தேன் சிந்தும் பனி மழைக்காலம்
என்னை தேடுகிறாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வருகிறாள்
___________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment