தொலையும் தொடர்பு:
= = = = = = = = = = = = = = =
கூட்டுக் கூடும்பம் உறவை வளர்த்தது,
நல்ல சந்ததியை கொடுத்தது,
மனிதர் மாண்பையும், பாரம்பரியத்தையும் மீட்டது,
நவநாகரிகத்தால் குடும்பங்கள் சிதையுண்டது,
சின்ன வீடாய் மாறியது,
உறவுகள் சிதைந்தது,
தொடு திரை வந்தது,
உறவுகளை வெட்டியது,
காணொளியில் முகம் பார்த்து பேசியதாலே,
அருகில் இருந்தும் நேரிலே தொடர்புகள் தொலைந்தது,
சமுக வலைத்தள விசாரிப்புகள்,
உறவுகளை அறுத்தெரிந்தது,
எந்நேரமும் தொடு திரையில் மனம் வீழ்ந்தது,
உறவுகளின் நட்போ சிதைந்தது,
தனிமை வாழ்க்கையாய் மாறியது,
உடல் நலமும் குன்றியது,
தொலையும் தொடர்பால் வாழ்க்கை நெறியே மாறியது,
வாழ்க்கை பயணத்திற்கு உறவுகள் முக்கியம்,
அதனை மீட்டெடுப்பதும் அவசியம்!
= = = = = = = = = = = =
வீரா
No comments:
Post a Comment