செக்கிழுத்த செம்மல்
= = = = = = = = = = = = =
அடிமைப்பட்ட இந்தியா, /
செக்கிழுத்த செம்மலால் நிமிர்ந்தெழுந்தது,/
வெள்ளையன் மனதைக் கொதிக்கச் செய்தது,/
கப்பல் வைத்திருந்த செல்வந்தனால் அலற வைத்தது./
அந்நியனை விரட்டச் செய்தது,/
சுதேசி இயக்கத்தை வளரச் செய்தது,/
தமிழனை தலை நிமிர வைத்தது, /
தூத்துக்குடியை ஸ்தம்பிக்கச் செய்தது, /
அவரின் வீரமும், விவேகமும், /
தேசத்தந்தையை திரும்பி பார்க்க வைத்தது, /
சுதந்திரத் தீயைக் கொளுத்திப் போட்டது, /
வஞ்சகம் நிலைக்குலையச் செய்தது /
பெரும் செல்வந்தனை செக்கிழுக்க வைத்தது, /
வறுமையோ பாதாளத்தில் தள்ளியது, /
அவரின் தாகம் அவர் இறந்தே தீர்ந்தது ./
பாரதத் தாய் மலர்ந்து தேசிய கொடியால் அவரை போர்த்தியதால் நாடே மகிழ்ந்தது./
= = = = = = = = = = = = = = =
வீரா
No comments:
Post a Comment