கானல் நீர் ஆகாதே
= = = = = = = = = = = =
பெண்ணே உன்னில் தஞ்சம் அடைந்திட
தேடி வருகிறேன்,
கண்ணே நீ கானல் நீர் ஆகி விடாதே,
நான் கரைந்து விடுவேன்!
வானவில்லின் பொன் நிறமே,
மழையில் புன்னகைக்கும் பொன் நகையே,
ஒளியாய் பிரகாசிக்கும் சந்திரனே,
நீ மறைந்து விடாதே,
நான் உருகி விடுவேன்!
தென்றலில் ஊடுருவும் கண்மணியே,
சாரலாய் குளிர்விக்கும் தெம்மாங்கு நீயே,
என்னை சிறைப்பிடித்த சிங்காரியே,
நீ மின்னலென மறைந்தால்,
நான் மழையாகிடுவேன்!
மனம் என்னும் சிறையில் அடைத்தாய்,
காதல் என்னும் கோட்டையில் வைத்தாய்,
நீ மண்ணில் புதைத்தாலும்,
என் உயிர் உன்னில் இருக்க,
நான் கல்லறையில் இருந்து மீண்டு வருவேன்,
கரம் பிடிக்க ஆசைப்பட்டேன்,
என்னை பாதாளத்தில் தள்ளி,
கண்ணே நீ கானல் நீராகி விடாதே,
என்னைக் காணாமல் செய்து விடாதே!
= = = = = = = = = = = = =
வீரா
No comments:
Post a Comment