மாந்தோப்புக் கிளியே
= = = = = = = = = = = = = =
மாந்தோப்புக் கிளியே,
மச்சான் நான் அழைக்கின்றேன்,
வாடிப் புள்ள வெளியே,
வக்கனையாப் பேசும் புயலே
நீ வயக்காடு வாடி மயிலே,
மாங்காயில செங்காய கடிக்க
தோப்புக்குள்ள
அணிலுக் கூட்டம் சுத்துது,
உன்ன பார்த்தாக்க,
மாங்காயென்று
கடிச்சிடும் வாடிப்புள்ள வெளியில,
உன்னை ருசிப் பார்க்க,
மாமன் மகன் காத்திருக்கேன் வெளியில,
நீ பாவாடை சட்டையில் பவனி வந்தா,
கிளிகள் கூட்டமோ மவுனமாய் பார்க்குதடி,
மாங்கனி நீதானோ,
உன்னை ருசிப் பார்க்க ஏங்குதடி,
ஏலேலங்கிளி நீதானடி,
பைங்கிளியும் நீ தாண்டி,
வேட்டக்காரன் வந்திருக்கேன்,
வசமா வந்து மாட்டிக்கோடி,
கண்ணாமூச்சி காட்டியது போதும்
கண்ணன் நான் காத்திருக்கேன்,
ரெண்டு மாங்கனிக்காக ஏங்கியிருக்கேன்,
மல்கோவா பறிக்க வேணும், ருசிக்க வேணும்,
வந்திடடி என் ராதைக் கண்ணே,
அத்த மக ரத்தினம் நீ,
மாமன் மகன் மரகதம் நான்,
பவுர்ணமி வெளிச்சத்துல
பிரகாசிக்கலாம் வாடிப் புள்ளே!
= = = = = = = = = = = =
வீரா
No comments:
Post a Comment