Thursday, 21 November 2019

கடலன்னை மடியில் வலைகள்

கடலன்னை மடியில் வலைகள்
= = = = = = = = = = = = = = = = = = =
கடற்கரையில் பிறந்து,
கடல் நீரைப் பருகி,
உப்புக் காற்றை சுவாசித்து,
கடலன்னையின் கருணையில்
வாழும் மீனவன்,

கடலுக்குள் செல்லும் அவனுக்கு
கடல் தாய் தான் பாதுகாப்பு,
சுழன்றடிக்கும் சூறாவளியில் சுழன்று,
சீறி வரும் அலையை எதிர்த்து,
கடலன்னை மடியில் வலைகளை விரித்து,
அவள் அருளும் சீதனத்தில் பிழைப்பை நடத்தும் தூயவன்,

கரையில் தன் குடும்பத்தைக் காக்க வைத்து,
ஆழ்கடலில் நாள் கணக்கில் காத்திருந்து மீனைப் பிடித்து,
கரை சேர்த்து காசாக்கும் மாயவன்,

எதிரி நாட்டு ராணுவத்திடம் சிக்கி,
அறுத்தெறிந்த வலையுடன்
படகை இழந்து,
மார்பில் பாய்ந்த குண்டுடன்
சடலமாய் மிதந்து வர வேண்டாம் என கடவுளை வேண்டும் உறவுகள்.

எதிரி நாட்டிடம் இருந்து ஊதியம் பெறாமல் கடல் எல்லையைக் காக்கும்
வீரன் அவன்,
மீனவர் தினத்தில் மீனவனைப் போற்றுவோம்,
= = ====== = = = = =
வீரா

No comments:

Post a Comment