மனம் சிதைக்கும் மனிதர்கள்
= = == = = = = = = = = = = = =
மனம் என்னும் உலகில்
பணம் என்ற நரகம் முளைத்தது,
மனிதம் மறைந்ததாலே
மனிதன் சுயத்தை இழந்தான்,
நல்லது என தெரிந்தும்
அதனை செய்ய மறுக்கும் மனிதன்,
தீயதை அறியாமல் செய்ததாக
மன்னிப்புக் கேட்டதே மிச்சம்,
மற்றவரின் எளிமையை
நகைப்புக்கு உள்ளாக்கி,
மனம் சிதைக்கும் மனிதர்களால்
நேயம் மறைந்து விடுகிறது,
எளிமையாய் வாழும் மனிதனின் மனம் சிக்கலாகி விடுகிறது,
சிக்கலை அகற்றி மனம் தெளிவதற்குள்
எல்லாம் முடிந்து விடுகிறது,
ஆசையை அகற்றி,
மோகத்தை குறைத்தால்
மற்றவரின் மனதை நோகடிக்காமல்,
மனச் சிதைவை அகற்றி,
நலமுடன் வாழலாம்.
==== = = = = = = = = = =
வீரா
No comments:
Post a Comment