கைதா(க்)கவா
- - - - - - - - - - - - - - -
சுட்டு விடும் பார்வையால்
சுடர் விடும் விழியினால்
அழகிய இமைகளால்
நெஞ்சத்தை கொள்ளையடிக்க வா
இமைத்தென்னை சிறையில் வைத்தாய்
உன் கண்ணில் அடைக்கலம் ஆனேன்
கண்ணீர் கடலில் மிதக்கின்றேன்
கருவிழியில் என்னை சிறைவைத்தாய்
செவ்விதழ் உதடுகளால்
சிவந்த முத்தம் தந்தாய்
மயக்கம் தெளியும் முன்
தூக்கம் கலைந்தது
என் கனவையும் களவாடிவிட்டாய்!
கொடியிடை இடுப்பும்
அழகிய நளினமும்
மயில் தோகையாய் கூந்தலும்
இன்புற செய்கிறது
இத்தனை பரவசம் ஏனோ
உன்னில் விழுந்தேன்
என்னை கைதா(க்)கவா
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
No comments:
Post a Comment