மழை ஓசைக் கேட்டு எழுந்தேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
********மழை ஓசை கேட்டு எழுந்தேன்********
மழை ஓசை கேட்டு எழுந்தேன்.
தவளையின் தாளத்தில் மெய்மறந்தேன்.
மலர்களின் மீது மழைத்துளி படர்ந்ததை கண்டேன்,
அவைகள் நடனமாடுவதை ரசித்தேன்,
தென்றல் காற்றுகள் இசைப்பதை குளிராக உணர்ந்தேன்,
மின்னல் கீற்றுகளும் பளிச்சிடும் முன்னே
பின்னே இடிமுழக்கமும் நான் கேட்டு பயந்தேன்.
குளிருக்கு நடுங்கும் கோழிகளின் இறகில்
அதன் குஞ்சுகள் அடக்கமாய் தஞ்சம் புகுந்ததை பார்த்தேன்.
பட்டாம் பூச்சிகள் அங்கும், இங்கும் சுற்றி வந்து,
பள்ளிக்கொள்ளும் இடத்தை தேடுகையில்
ரீங்காரம் இடும் வண்டுகளும்,
பெயர் கூற தெரியாத எத்தனை எத்தனை பூச்சிகளின்
இன்னிசைகள் காதில் இனிக்கின்றன.
மேற்கத்திய இசை, கிழக்கத்திய இசைகளை கேட்டிருக்கலாம்,
மழை ஓசையில்தான், எத்தனை வகை ஓசை.
எந்த காலத்திலும் கேட்க முடியாத,
பதிய முடியாத இன்னிசை அல்லவா மழை!
பல நாள் வெய்யில், வெம்மையை தணித்து விடுகிறது,
ஒரு நாள் மழை.
பூமி குளிர்ந்து, புது உயிர்கள் துளிர்விடுகிறது,
மழையின் இன்னிசையில்
தன் தாயை பார்த்த பூரிப்பை அடைகிறது, தாவரங்கள்.
-*************அன்புடன் வீரா**************
No comments:
Post a Comment