மாவீரா நாங்கள் உங்கள் வழியில்
-------------------.
சத்ரியனுக்காக பிறந்த மாவீரா
உம் மறைவு எமக்கு பேரழிவா,
நீவீர் இருந்த வரை நீலத்திற்கு முற்றுப்புள்ளி - இனி
எம் குலத்திற்கு காவல் கேள்வி குறியோ!
நீங்கள் வாழ்ந்த சம காலத்தில்
மஞ்சளின் மகிமை கண்டோம்.
எம் இன இளைஞர்களின் வீரம் கண்டோம்,
சிங்கத்தின் பெருமைதனை உணர்ந்தோம்.
நீவீர் விதைத்த வீரம் களவு போகவில்லை
எம் குல தலைவா,
நம் பெண்களின் காவலாய்
நாங்கள் புறப்படுவோம்.
என் இளம் சிங்கங்கள்
உம் உருவம் பொறித்த ஆடையுடன் காவல் பணியில்
சத்ரிய படையாய்
புறப்பட்டதை காண நீவீர் இல்லையே,
என் தலைவா!
நீவிர் விதையாய் விதைக்கப்பட்டீர்
நாங்கள் விருட்சமாய் வளருவோம்,
நாடக காதலை வேரறுப்போம்,
சம தர்மத்தை நிலைநாட்டுவோம்,
எம் குலத்தை காப்போம் என
சூளுரைக்கும் உம் படைதளபதிகளை
காணாமல்
மணிமண்டபத்தில் உறங்குகிறாயே
என் தலைவா,
சூலுரைகள் கேட்கிறதா உம் காதுக்கு!
ஆயிரம் வீணர்கள் வந்தாலும்,
ஒற்றை சிங்கமாய் வெகுண்டெழுந்து
எதிர்த்த என் தலைவா,
இனி ஒரு வீரனை எப்படி காண்போம்.
கோட்டை ஒன்றை கட்டி
குலதெய்வமாய் மாற்றி விட்டார்களே,
அக்கினியில் தோன்றிய என் தலைவா
காடுவெட்டியில் அணைந்து ஓய்வெடுப்பது ஏனோ,
உங்கள் மறைவு தீப்பிழம்பாய் எங்களை எரிக்கிறதே,
எங்களை வீரு கொண்டெழச் செய்யவா,
உம் மறைவால் நடக்கும் சதிவலைகள்
ஆயிரம், ஆயிரம்
உம்மை தூற்றிய மாற்று சமுக வாயெல்லாம்
போற்றுகிறது உம் வீரத்தின் வரலாறை .
ஒற்றுமைக்கு வித்திட்ட
வன்னிய தலைவா,
உம் புகழ் வாழ்க,
உங்கள் வழியில் எங்கள் பயணம் தொடரும்,
எம் இனத்தை மட்டும் அல்ல
நம் சகோதர இனத்தையும், மானத்தையும் காப்போம்.
No comments:
Post a Comment