ஆரியனூர் கோணாங்குப்பம் ஆனது எப்படி:
முகாசப்பரூர் ஜமீன் பாளையகாரர் ஆளுகைக்குட்பட்ட பகுதி ஆரியனூர். பின்னாளில் அரசர் வசிக்கும் பகுதி என்பதால் கோண் ஆண்ட குப்பம் எனவும், கோண் என்றால் அரசனையும், அரசன் ஆண்டதையும், மக்கள் குடியிருப்பு பகுதி குப்பம் என்பதாலும் கோணாங்குப்பம் என அழைக்கப்பட்டதாக செவி வழி செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆரியனூர் என்றழைக்கப்படும் கோணாங்குப்பம் பண்டைய காலத்தில் இயற்கை வளமிக்க நீரோட்டம் உள்ள அழகான காடாக இருந்துள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்கள் ஆடுமாடுகளை மேய்க்கும் தொழிலை ஏற்றிருந்தனர். இந்த குறுங்காடு முகாச பரூர் பாளையகாரர் ஆட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்த பகுதியாகும். இத்தாலி நாட்டில் பிறந்த கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்ற பெயரை உடைய பின்னாளில் வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்டவர், தேம்பாவணி என்ற இலக்கியத்தை படைத்த புலவர். இவர் சிறுவயதில் இருந்து மரியன்னை மாதாவின் புகழை பரப்புவதற்காக இந்தியா வந்து 2 மாதா சிலைகளுடன் கால்நடையாக பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இவர் ஆரியனூர் என்ற தற்போதைய கோணாங்குப்பம் காட்டை கடந்து செல்கையில் சோர்வு ஏற்படவே வீரமாமுனிவர் அந்த காட்டில் ஓய்வெடுத்தார். காட்டில் இருந்த ஆலமரத்தடியில் தனது 2 மாதா சிலைகளையும் அருகில் வைத்து கொண்டு தூங்கிய போது அங்கு ஆடு, மாடு மேய்த்த சிறுவர்கள் வீரமாமுனிவர் தனது தோள்ப்பையில் வைத்து அணைத்து கொண்டு தூங்கிய போது அந்த சிலையின் அழகில் மயங்கி அதில் ஒரு சிலையை சிறுவர்கள் எடுத்து சென்றனர். பின்பு அதனை என்ன செய்வது என தெரியாமல் அப்பகுதியில் உள்ள ஒரு அடர்த்தியான முட்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
வீரமாமுனிவர் எழுந்து பார்த்த போது தனது தோள் பையில் வைத்திருந்த ஒரு சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து முகாச பரூர் சென்று கச்சிராயர் என்ற பாளையகாரரை சந்தித்து மரியன்னையின் புகழை அவரிடம் கூறுகிறார். அப்போது அந்த ஜமீன் தனக்கு செல்வமும், அதிகாரமும் இருந்த போதும் தனக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது வீரமாமுனிவர் அந்த ஜமீனிடம் மாதாவிடம் வேண்டிகொள்ளுங்கள், தங்களுக்கு நிச்சம் குழந்தை இருக்கும் என கூறிவிட்டு, தான் கொண்டு வந்த மாதா சிலை காணாமல் போனதையும் அந்த ஜமீனிடம் கூறிவிட்டு ஏலக்குறிச்சி சென்றுவிடுகிறார்.
அந்த ஜமீன்தாரரும் தனக்கு குழந்தை வேண்டி வீரமாமுனிவர் கூறியபடி மரியன்னையிடம் மனம் உருகி வேண்டி கொண்டார். அப்போது அவர் தூங்கிய போது அன்னை கனவில் தோன்றி தான் காட்டில் தணித்திருப்பதாகவும், எனக்கு ஒரு கோவில் அமைத்து கொடுத்தால் உன் குலம் தழைக்க ஒரு ஆண்மகனை தருவேன் என கூற கனவு கலைந்துவிடுகிறது. மறுநாள் காலை எழுந்த கச்சிராயர் தனது கூலியாட்கள் மூலம் மாதாவைத் தேடி காட்டை தூய்மை படுத்திய போது சிறுவர்கள் காட்டில் புதரில் மறைந்து வைத்த அன்னையின் சிலை கிடைத்தது. தனது கனவில் வந்த அதே மாதாவின் சிலையை பார்த்து பூரிப்படைந்த கச்சிராயர் அந்த மாதாவை அங்கேயே வைத்து வழிபட தொடங்கினார். அதன்படி அந்த கச்சிராயருக்கு ஆண் வாரிசு பிறந்தது. இதனால் தன் வேண்டுதல் நிறைவேறியதால் அன்னை மாதா கனவில் கூறியது போலவே சிறு கோவில் கட்டி வழிப்பட்டார். இன்றும் அந்த மாதா சிலை தற்போதைய ஆலயத்தின் இடது புறமாக ஒரு மரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீரமாமுனிவர் தன் பயணத்தின் போது இந்த பகுதியை மீண்டும் கடந்த செல்கிறார். அப்போது தான் தொலைத்த சிலையை வைத்து ஆரியனூர் மக்கள் வழிபடுவதை அறிந்து அதனை காண அங்கு சென்றார். அங்கு தான் தொலைத்த சிலையை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடுவதை பார்த்த வீரமாமுனிவர், மகிழ்ச்சியடைந்து பெரிய ஆலயத்தை அமைத்தார். தற்போது அமைந்துள்ள கோணாங்குப்பம் பெரியண்ணை ஆலயமே வீரமாமுனிவர் தன் பயண காலத்தில் முதன் முதலாக கட்டிய கோவிலாகும். இந்த கோவில் போர்ச்சுகீசியர் பாணியில் கட்டப்பட்டதாகும். வீரமாமுனிவரின் சின்னமாகவும் விளங்குகிறது. வீரமாமுனிவர் வெளிநாட்டவர் என்றாலும் தமிழை முறைப்படிபயின்று தேன் சொட்டும் காவியமாம் தேம்பாவணி என்ற காவியத்தை இயற்றினார். அதில் ஆரியனூர் அன்னையை பற்றியும் பாடியுள்ளார். இந்த இலக்கியத்தை கோணாங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலயத்தில்தான் எழுதி முடித்தார் என கூறப்படுகிறது.
பரூர் பாளையகாரரின் குலதெய்வமான அம்மனை மங்கலநாயகியம்மன் என்றழைக்கப்படுவது போலவே பாளையகாரருக்கு குழந்தை இல்லாத குறையை நீக்கி குலத்தை தழைக்க செய்ததால் ஆரியனூர் மாதாவை புனித பெரியநாயகி அன்னை என்றும் இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறார். அதனால்தான் என்னவோ குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த புனித அன்னை பெரியநாயகியை வழிப்பட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
முகாசப் பரூர், மங்கலம்பேட்டை, கோணாங்குப்பம் இந்த 3 ஊர்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும், பல வரலாற்று தகவல்களை தன்னகத்தே அடக்கி வைத்திருப்பதாலும், வரலாற்று ஆசிரியர்களின் ஆய்வுக்கு சொர்க்கப்புரியாக விளங்கி வருகின்றன. பல வரலாற்று ஆய்வாளர்கள் இந்த ஊர்களை பற்றியும், கல்வெட்டுகள், பண்டையகால சிலைகள், அரண்மனை குறித்தும், இப்பகுதியை ஆண்ட அரசகள் குறித்தும் தீவிர கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முகாசப்பரூர் ஜமீன் பாளையகாரர் ஆளுகைக்குட்பட்ட பகுதி ஆரியனூர். பின்னாளில் அரசர் வசிக்கும் பகுதி என்பதால் கோண் ஆண்ட குப்பம் எனவும், கோண் என்றால் அரசனையும், அரசன் ஆண்டதையும், மக்கள் குடியிருப்பு பகுதி குப்பம் என்பதாலும் கோணாங்குப்பம் என அழைக்கப்பட்டதாக செவி வழி செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆரியனூர் என்றழைக்கப்படும் கோணாங்குப்பம் பண்டைய காலத்தில் இயற்கை வளமிக்க நீரோட்டம் உள்ள அழகான காடாக இருந்துள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்கள் ஆடுமாடுகளை மேய்க்கும் தொழிலை ஏற்றிருந்தனர். இந்த குறுங்காடு முகாச பரூர் பாளையகாரர் ஆட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்த பகுதியாகும். இத்தாலி நாட்டில் பிறந்த கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்ற பெயரை உடைய பின்னாளில் வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்டவர், தேம்பாவணி என்ற இலக்கியத்தை படைத்த புலவர். இவர் சிறுவயதில் இருந்து மரியன்னை மாதாவின் புகழை பரப்புவதற்காக இந்தியா வந்து 2 மாதா சிலைகளுடன் கால்நடையாக பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இவர் ஆரியனூர் என்ற தற்போதைய கோணாங்குப்பம் காட்டை கடந்து செல்கையில் சோர்வு ஏற்படவே வீரமாமுனிவர் அந்த காட்டில் ஓய்வெடுத்தார். காட்டில் இருந்த ஆலமரத்தடியில் தனது 2 மாதா சிலைகளையும் அருகில் வைத்து கொண்டு தூங்கிய போது அங்கு ஆடு, மாடு மேய்த்த சிறுவர்கள் வீரமாமுனிவர் தனது தோள்ப்பையில் வைத்து அணைத்து கொண்டு தூங்கிய போது அந்த சிலையின் அழகில் மயங்கி அதில் ஒரு சிலையை சிறுவர்கள் எடுத்து சென்றனர். பின்பு அதனை என்ன செய்வது என தெரியாமல் அப்பகுதியில் உள்ள ஒரு அடர்த்தியான முட்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
வீரமாமுனிவர் எழுந்து பார்த்த போது தனது தோள் பையில் வைத்திருந்த ஒரு சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து முகாச பரூர் சென்று கச்சிராயர் என்ற பாளையகாரரை சந்தித்து மரியன்னையின் புகழை அவரிடம் கூறுகிறார். அப்போது அந்த ஜமீன் தனக்கு செல்வமும், அதிகாரமும் இருந்த போதும் தனக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது வீரமாமுனிவர் அந்த ஜமீனிடம் மாதாவிடம் வேண்டிகொள்ளுங்கள், தங்களுக்கு நிச்சம் குழந்தை இருக்கும் என கூறிவிட்டு, தான் கொண்டு வந்த மாதா சிலை காணாமல் போனதையும் அந்த ஜமீனிடம் கூறிவிட்டு ஏலக்குறிச்சி சென்றுவிடுகிறார்.
அந்த ஜமீன்தாரரும் தனக்கு குழந்தை வேண்டி வீரமாமுனிவர் கூறியபடி மரியன்னையிடம் மனம் உருகி வேண்டி கொண்டார். அப்போது அவர் தூங்கிய போது அன்னை கனவில் தோன்றி தான் காட்டில் தணித்திருப்பதாகவும், எனக்கு ஒரு கோவில் அமைத்து கொடுத்தால் உன் குலம் தழைக்க ஒரு ஆண்மகனை தருவேன் என கூற கனவு கலைந்துவிடுகிறது. மறுநாள் காலை எழுந்த கச்சிராயர் தனது கூலியாட்கள் மூலம் மாதாவைத் தேடி காட்டை தூய்மை படுத்திய போது சிறுவர்கள் காட்டில் புதரில் மறைந்து வைத்த அன்னையின் சிலை கிடைத்தது. தனது கனவில் வந்த அதே மாதாவின் சிலையை பார்த்து பூரிப்படைந்த கச்சிராயர் அந்த மாதாவை அங்கேயே வைத்து வழிபட தொடங்கினார். அதன்படி அந்த கச்சிராயருக்கு ஆண் வாரிசு பிறந்தது. இதனால் தன் வேண்டுதல் நிறைவேறியதால் அன்னை மாதா கனவில் கூறியது போலவே சிறு கோவில் கட்டி வழிப்பட்டார். இன்றும் அந்த மாதா சிலை தற்போதைய ஆலயத்தின் இடது புறமாக ஒரு மரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீரமாமுனிவர் தன் பயணத்தின் போது இந்த பகுதியை மீண்டும் கடந்த செல்கிறார். அப்போது தான் தொலைத்த சிலையை வைத்து ஆரியனூர் மக்கள் வழிபடுவதை அறிந்து அதனை காண அங்கு சென்றார். அங்கு தான் தொலைத்த சிலையை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடுவதை பார்த்த வீரமாமுனிவர், மகிழ்ச்சியடைந்து பெரிய ஆலயத்தை அமைத்தார். தற்போது அமைந்துள்ள கோணாங்குப்பம் பெரியண்ணை ஆலயமே வீரமாமுனிவர் தன் பயண காலத்தில் முதன் முதலாக கட்டிய கோவிலாகும். இந்த கோவில் போர்ச்சுகீசியர் பாணியில் கட்டப்பட்டதாகும். வீரமாமுனிவரின் சின்னமாகவும் விளங்குகிறது. வீரமாமுனிவர் வெளிநாட்டவர் என்றாலும் தமிழை முறைப்படிபயின்று தேன் சொட்டும் காவியமாம் தேம்பாவணி என்ற காவியத்தை இயற்றினார். அதில் ஆரியனூர் அன்னையை பற்றியும் பாடியுள்ளார். இந்த இலக்கியத்தை கோணாங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலயத்தில்தான் எழுதி முடித்தார் என கூறப்படுகிறது.
பரூர் பாளையகாரரின் குலதெய்வமான அம்மனை மங்கலநாயகியம்மன் என்றழைக்கப்படுவது போலவே பாளையகாரருக்கு குழந்தை இல்லாத குறையை நீக்கி குலத்தை தழைக்க செய்ததால் ஆரியனூர் மாதாவை புனித பெரியநாயகி அன்னை என்றும் இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறார். அதனால்தான் என்னவோ குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த புனித அன்னை பெரியநாயகியை வழிப்பட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
முகாசப் பரூர், மங்கலம்பேட்டை, கோணாங்குப்பம் இந்த 3 ஊர்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும், பல வரலாற்று தகவல்களை தன்னகத்தே அடக்கி வைத்திருப்பதாலும், வரலாற்று ஆசிரியர்களின் ஆய்வுக்கு சொர்க்கப்புரியாக விளங்கி வருகின்றன. பல வரலாற்று ஆய்வாளர்கள் இந்த ஊர்களை பற்றியும், கல்வெட்டுகள், பண்டையகால சிலைகள், அரண்மனை குறித்தும், இப்பகுதியை ஆண்ட அரசகள் குறித்தும் தீவிர கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment