#ஐ_லவ்_யு செம்பருத்தி
எங்க வீட்டில்
செம்பருத்தி கன்று ஒன்றை நட்டு வைத்தேன்,
அது ஒத்தச் செடியாய்
வளரத் தொடங்கியது,
பாவம் அதற்கு ஜோடி கன்று ஒன்றில்லை.
ஜோடி இருந்தால் தானே எனர்ஜியுடன் வளரும்.
அதனால் நானே ஜோடியானேன்,
அவளை தண்ணீர் ஊற்றி வளர்த்தேன்,
சில நாட்களுக்கு முன்புதான்
செம்பருத்தி தெளிந்தாள்,
நேற்று அழகாய் தெரிந்தாள்,
மொட்டு ஒன்று விரிந்திட நேரம் காத்திருந்தது,
காலையில் எழுந்தேன்,
கதவை திறந்தேன்,
அவள் மலர்ந்திருந்ததை கண்டேன்,
சோம்பல் தெளிந்தேன்,
என் கைப்பேசியில் அவளை விதம் விதமாக புகைப்படம் எடுத்தேன்.
ஏனென்றால் அவள் புத்தம் புது தென்றலில் அழகாய் தெரிகிறாள்,
வாடினாலோ, யாரேனும் களவாடினாலோ
என் செம்பருத்தியை எங்கு சென்று தேடுவேன்,
ஏன் என்றால் அவள் மலரல்லவா,
பெண்கள் கூட அவளிடம் ஆசைக் கொள்வார்கள்,
அதனால் தான் என் கைப்பேசி கிடங்கில் அவளை சிறைப்பிடித்தேன்.
#ஐ_லவ்_யு செம்பருத்தி
எங்க வீட்டில்
செம்பருத்தி கன்று ஒன்றை நட்டு வைத்தேன்,
அது ஒத்தச் செடியாய்
வளரத் தொடங்கியது,
பாவம் அதற்கு ஜோடி கன்று ஒன்றில்லை.
ஜோடி இருந்தால் தானே எனர்ஜியுடன் வளரும்.
அதனால் நானே ஜோடியானேன்,
அவளை தண்ணீர் ஊற்றி வளர்த்தேன்,
சில நாட்களுக்கு முன்புதான்
செம்பருத்தி தெளிந்தாள்,
நேற்று அழகாய் தெரிந்தாள்,
மொட்டு ஒன்று விரிந்திட நேரம் காத்திருந்தது,
காலையில் எழுந்தேன்,
கதவை திறந்தேன்,
அவள் மலர்ந்திருந்ததை கண்டேன்,
சோம்பல் தெளிந்தேன்,
என் கைப்பேசியில் அவளை விதம் விதமாக புகைப்படம் எடுத்தேன்.
ஏனென்றால் அவள் புத்தம் புது தென்றலில் அழகாய் தெரிகிறாள்,
வாடினாலோ, யாரேனும் களவாடினாலோ
என் செம்பருத்தியை எங்கு சென்று தேடுவேன்,
ஏன் என்றால் அவள் மலரல்லவா,
பெண்கள் கூட அவளிடம் ஆசைக் கொள்வார்கள்,
அதனால் தான் என் கைப்பேசி கிடங்கில் அவளை சிறைப்பிடித்தேன்.
#ஐ_லவ்_யு செம்பருத்தி

No comments:
Post a Comment