நிவாரணம் கிடைக்குமா?
தூக்கத்தை துளைத்து
துன்பத்தை துறந்து
தூவானத்தை நம்பி
துதித்து பயிரிட்டு என்ன பயன்!
பத்து ரூபா செலவு செஞ்சி
எட்டு ரூபா கிடைச்சாக் கூட
கணக்கு பார்க்காம உழைச்சி
கிடைச்ச பயன்
அரை வயிறாவது நிரம்பும்.
புரவி கிரவின்னு வந்து
சூறாவளி முகாந்திரம் போட்டாலும்
நிரம்பிய அரை வயிறும் காணாம போகும்,
தோல் சுருங்கிய நெஞ்சங்கள்
பயிரை கையில் ஏந்தி
விவசாய களத்தில் நின்றனர்.
காப்பீடு செய்தும் புண்ணியமில்லை,
நிவாரணமாவது கொடுங்களேன்!
வாடிய பயிர்களுடன்
போராட்ட களத்தையும் காண்கின்றனர்.
No comments:
Post a Comment