சாலை பயணத்தில்
நம் சகலமும் பயணிக்கிறது,
நொடியில் இடி விழுந்தால்
பயணம் பங்கமாகும்!
வாகனத்தில் புறப்படும் போது
இல்லத்தரசியின் நெஞ்சம் படபடக்கும்,
வீடு வந்து சேரும் வரை
பிபி எகிறி, ஹார்ட் அட்டாக் வரை
வந்து போகும்.
ஹெல்மெட் அணியா மண்டையை
எமனின் பாசக் கயிறு எளிதில் ஈர்க்கும்,
சீட் பெல்ட் போடாத உடலை
சித்ரகுப்தனின் டைரி கூறு போட்டு விற்கும்.
சூதும் வாதும் வாழ்க்கைக்கு உதவும்
செல்போன் பேசி வாகனம் ஓட்டினால்
பிரச்சினைகள் உன்னை கவ்வும்.
நீ சிக்னல் கொடுத்தால் காதலி
கவனிக்கும் போது இனிக்கும்.
சிக்னலே உனக்கு சிக்னல் கொடுத்தால்,
சிக்கலில் வாழ்க்கை கசக்கும்.
காப்பீடு உன்னை காக்கும்,
உன் குடும்பத்தையும் காக்கும்,
உன் வாகனத்தை காக்கும்,
எதிரியையும் காக்கும்.
மோட்டாரில் பயணம்,
எப்பொழுதும் எதுவும் நடக்கும்,
கவனம் சிதறினால் மரணமும் நடக்கும்,
அப்பாவியின் குடும்பமும் சிதையும்.
விபத்து என்பது ஒரு சாபமல்ல,
உனக்கு நீயே தரும் பாவம்,
உமது கவன சிதறலால் நடக்கும் கொடுமை,
உன் மடமைக்கு கிடைத்த பரிசு.
ஒரு கையில் ஸ்டியரிங்கு,
மற்றொரு கையில் செல்போனு,
உனக்கு இருக்கிறது விரைவில் ஆப்பு,
எதிரே நிற்கிறது எமனின் ஜீப்பு.
வீதியில் கவனத்துடன் போனால் உல்லாசம்,
போதையில் போனால் கைலாசம்,
கூலா போனால் குடும்பம் உன் வசம்,
டென்ஷனில் போனால் எல்லாம் நாசம்.
சாலை விதிகள் உன்னை வாழ வைக்கும்,
நீ மீறி விட்டால் சவக் குழிக்குள் தள்ளும்.
சட்டமும் திட்டமும் உன்னை காக்கும்,
மீறும் போது உன்னை வீழ்த்தும்.
குடி உனக்கு மகிழ்ச்சியை கொடுக்கலாம்,
போதையில் வாகனம் ஓட்டினால்,
உன் சமுகத்தையே குடிக்கலாம்,
விபத்தில் உயிர் போனால்
குடும்பம் நிர்கதியாகும்.
உயிர் தப்பினால்
குடும்பம் பின்னோக்கி சுழலும்.
நன்றாக இருந்தால்
நாலு காசும் வேண்டாம்,
பத்தில் ஒன்றாக வாழலாம்.
விபத்தில் சிக்கினால்
நாலு காசும் நாசமாகும்,
நலமும் விரையமாகும்.
No comments:
Post a Comment