Saturday, 2 January 2021

மனக் குமுறல்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2021

இனிய புத்தாண்டே வா!
2020 இறக்கும் போது
என் தீவினைகள் அழிகின்றன!
2021 பிறக்கும் போது என் நல்விணைகள்
பிறக்கின்றதாகவே நம்புகின்றேன்!

எனது ராசியோ என்னவோ
ஒவ்வொரு வருடமும் புதிய நட்புகள்
பிறக்கின்றன,
சில வருடங்களில் நட்பில் பிளவுகள் நடக்கின்றன,

அதனால் வெறுப்புகளை
உமிழ்ந்ததில்லை நான்,
அப்படி உமிழ்ந்தால் நாம் அன்னாந்து படுத்துக் கொண்டு
உமிழ்ந்தால் நம்மீதே எச்சில் படுமல்லவா,
அதனால் கட்டுப்படுத்தி கொள்கிறேன்,

ஆனால் என் மீது உண்மையான நட்பு பாசம்
கொண்டவர்களை
என் புரிதல் இன்மையால்
இழந்திருக்கிறேன்,
என்னை நேசித்தவர்கள்
என்னை மன்னிக்கவும்.

சில உறவுகள் நம்மை
புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்,
காரியம் ஆக
காலை பிடிக்கவும் அவர்கள்
மறுத்ததில்லை,
காரியம் ஆனதும் கழட்டி விடவும்
அவர்கள் தயங்கியதில்லை,
(புரிந்தவர்களுக்கு புரியும்)

தயவு செய்து உறவை கூறி, சமுகத்தை
கூறி ஆதாயம் தேட முயற்ச்சிக்காதீர்கள்.
அவ்வாறு நீங்கள் நடந்தால் தான்
மற்றவர்களாலும் நடக்க முடியும்.

ஒரு சிலருக்கு நான் ஆதரவாக
 நடப்பதாக (நான் தந்தை ஸ்தானத்தில் நினைக்கும்) சில விஷமிகள் பிரச்சாரம் செய்யலாம்.
எனக்கு விதிக்கப்பட்ட விதிகளின்படியே நான் செயல்படுகிறேன்.
2021 லும் அப்படியேத் தான் நடப்பேன்.
அதில் விதிகள் மாறினால்
நானும் மாறித்தானே ஆக வேண்டும்.

அன்பிற்கும், பாசத்திற்கும், உறவுக்கும்
பாலமாக இருக்க நினைத்ததன் பலன்
இன்று நான்
சிலரின் சூழ்ச்சி, தந்திரத்தால்
பலருக்கு வேண்டாதவனாகியிருக்கலாம்.
என்னை புறம் பேசி மகிழ்ந்திருக்கலாம், .
அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை,
நான் என்றும் பொதுவானவனே!

செய்தியாளரான பின்பு
பல நல்ல உள்ளங்களை சந்தித்துள்ளேன்.
சில பல நட்புகளை சம்பாதித்தேன்,

சில சிக்கல்கள், பல புகழ்ச்சிகள்,
பல இகழ்ச்சிகள்,
சில பல மாறுதல்கள்,
சிலரை சமாளிக்க வேண்டி
என் இயல்பு தன்மையை இழந்தும்
பலனில்லை,

சிலர் சமுக உணர்வுடன் செயல்படு என்றனர்,
நான் செயல்பட்டும் பலனில்லை,
ஆனால் அவ்வாறு கூறியவர்கள்
மாறி விடுகின்றனர்.

சிலர் நண்பர்களை கைவிடாதே என்றனர்,
அவர்களை தலையில் தூக்கி வைத்த பலன்,
அந்த நண்பர்களே இன்னும் சமுகத்தை
காட்டி நட்பை இகழ்வடைய செய்கின்றனர்!

ஒரு சிலரை உயிராக நினைத்து 
பழகியும் பலனில்லை,
காலாவதியாகிவிடுகின்றனர்.
அதனால் யாரிடமும் 
நெருங்கி பழக ஒரு பயம்!

கடந்த 2019 ம்ஆண்டு கவிஞராய்
உதயமானேன்,
2020 ம் ஆண்டில்
எழுத்தாளராய் ஆக ஆசை,
ஏனோ நிறைவேறவில்லை.

ஒரு சிலரை பிடித்து போய்
சேவை புரிந்தும் பயனில்லை,
ஒரு நபர், நான் தான் உன்னை வளர்த்து விடுகின்றேன் என்கின்றார்.
( #யூரியா, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, மர்லி மாவு போட்டு வளர்த்தவர் #அவர்தான்)
இன்று அவர் வளர்ந்த உயரம்
மங்கி வருகிறது, 
தலைக்கணம் தலையை காணாமல் செய்யும்
பதவி வந்தால் பணிவும் உடன் வர வேண்டும்.
இல்லையேல் காணாமல் போக வேண்டும்.

ஒரு சிலரை நான் உயர்த்த வேண்டும்
என நினைத்தால்,
அவர்கள் மற்றொரு நபரை
வளர்க்க முற்படுகின்றனர்.


விவரம் தெரிந்த 30 வருடங்களில்
அனுபவங்கள் சில பல,
ஆனால் என்னுடன் பழுகும் நட்புகளை
மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை,,

ஒவ்வொரு நட்பும் ஒரு விதம்,
ஒரு நட்பு எனக்கு பிடித்தவருடன் மட்டுமே
பேச வேண்டும் என்கிறது,
மற்றொரு நட்பு எனக்கு பிடிக்காதவர்களுடன் பேசினால்
எனக்கு எதிராய் சதி செய்கிறது.

எனக்கு எதிராய்,
என்னை காலி செய்யும் நோக்குடன்
அவதூறு கடிதம் எழுதியவர்களோ,
இன்று நெருங்கி தான் பழகுகின்றனர்.
என்ன செய்ய,
நட்பை மதிக்க வேண்டி 
நடந்ததை மறந்து பழக வேண்டிய நிலை.

அனைவருக்கும் நல்லவனாக இருக்க விரும்பினேன்,
நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாகவே
நடிப்பது!
இந்த வருடம் முதல்
எண் இயல்பு என்னவோ அதன்படி
நடிக்க போகிறேன்!

#வாழ்க்கையே_ஒரு_நாடக -மேடை_அதில்_நான்_ஒரு_கலைஞன்.

யாரோ கூறியது!

(பின் குறிப்பு : இது கவிதை இல்லீங்கோ, எனது மனக் குமுறல், உடனே வரிந்து கட்டிக்கிட்டு இது உரைநடையாக உள்ளது என மட்டும் பதிவை போட்ராதீங்க, ஏன்னா ஒரு பிரபல எழுத்தாளர் என்னையே பாலோ பன்றார்.)








No comments:

Post a Comment