Thursday, 20 December 2018

வரலாற்றில் வன்னியர் மகா வம்சம்

இறைவனின்
.......................
வரலாற்றில் வன்னியர் மகா வம்சம்
...............................................................
                    அரசியல்
                      *********
கானூர் சாமிக்கண்ணு படையாச்சி
                       .................                         
      தொடர் - 2
1954 இல் திரு. எஸ். எஸ். ராமசாமி படையாச்சியார் காங்கிரசில் ஐக்கியமானார். எனவே,  கானூரார் காங்கிரஸில் இணைந்தார்.
பின்னர் ராமசாமி படையாச்சியார் காங்கிரசை விட்டு விலகி தனிக் கட்சி தொடங்கிய போதும்
சாமிக்கண்ணு படையாச்சி காங்கிரஸிலிருந்து வராமல் அங்கேயே தொடர்ந்து இருந்தார்.

1957 முதல் 1962 முடிய புவனகிரியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான குடிநீர், பள்ளிக்கூடம், பாலம் அமைத்தல் ,சாலைகள் அமைத்தல், இலவச கல்வி போன்ற விஷயங்கள் பற்றியே இருந்ததால் மக்கள் நல் மதிப்பை பெற்றார்.
1955 இல் தென்னார்க்காடு மாவ‌ட்ட ஜில்லா போர்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் சகல அதிகாரமும் படைத்த மாவட்ட ஜில்லா போர்டு தலைவராக இவர் இருந்ததால்... ஒரு தலைவர் எப்படி செயல்பட வேண்டும் என்று இந்தியாவிற்கே எடுத்துக் காட்டாக இருந்தார்.
அனைத்து கிராமங்களுக்கும் சாலைகள், குடிநீர் வசதி, போக்குவரத்து, போன்ற அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.

இவர் காலத்தில் மரக்காணம்,
மருங்கூர் உள்பட 143 பள்ளிகளை கட்டினார்.
அந்த மாவ‌ட்ட எம். எல் ஏக்கள்,
எம். பி க்கள், அமைச்சர்கள் எல்லோரும் முதல்அமைச்சர்
திரு, காமராஜர் அவர்களிடம் சென்று எங்களை எந்த அதிகாரிகளும் மதிப்பது இல்லை. எல்லோரும் கானூர் சாமிக்கண்ணு படையாச்சிக்கு வேலை செய்யவே நேரமில்லை என்று கூறுவதாகவும் புலம்பி ஒப்பாரி வைத்து அழுவதை தாங்க முடியாம‌ல்
திரு, காமராஜ் அவர்கள் ஜில்லா போர்டு தலைவரின் அதிகாரத்தை குறைத்து மாவ‌ட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை முதல் முதலில் இயற்றினார்.

அவ‌ரது காலம் தென்னார்க்காடு மாவட்டத்தின் மறுமலர்ச்சிக் காலம் என்பது ஒரு சத்திரிய வரலாறு.

சாமிக்கண்ணு படையாச்சி பற்றிய சில சுவையான தகவல்கள்.
.............................................................
சிதம்பரம் பக்கத்தில் உள்ள முத்தரசன் பேட்டை என்ற கிராமத்திற்கு இவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது, அந்த கிராம மக்கள் பள்ளிக்கூடம் வேண்டும் என்று கேட்க உடனடியாக அங்கிருந்த ஒரு மாட்டுக்கொட்டையை அதன் உரிமையாளரிடம் கேட்டு பெற்று அவர் அனுமதித்த உடனே
டேய் இங்குள்ள எஸ். எஸ். எல். சி படிச்ச பசங்க எல்லோரும் வாங்க அந்த இடத்தை சுத்தம் செய்யுங்கள் அனுமதி வாங்கி வருகிறேன் என்று கூறி அனுமதி வாங்கி உருவானதுதான் முத்தரசன்பேட்டை பள்ளி.
அதேபோல பண்ருட்டி தாலுக்கா மருங்கூர் என்ற கிராமத்தில்
ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது ஊர்க்காரர்கள் பிள்ளைகள் படிக்க 20 கிலோ மீட்டார் துரத்தில் உள்ள பண்ருட்டிக்கு செல்லும் நிலை உள்ளது. என்று கூறினார்கள்.
உடனே அந்த ஊர் மணியக்காரரைப் ( முன்னாள்
தி மு க சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர், நந்தகோபால கிருஷ்ணனின் தந்தை குமாரசாமி படையாச்சிதான் மணியம். நாட்டாண்மை, பெரும் பணக்காரர்) பார்த்து கானூரார் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்க குறைந்தது 4 ஏக்கர் நிலம் வேண்டும். என்ன செய்யலாம் என்று கேட்க
உடனே குமாரசாமி படையாச்சி தனது 5 ஏக்கர் முந்திரி நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட நன்கோடையாக கொடுத்தார். நம்ப முடியவில்லையா..?
அதுதான் உண்மை.

பதவி ஏதும் இல்லாமல் இருந்த நேரத்தில் சில பள்ளிகளுக்கு அனுமதி வேண்டி அவரை அணுகினர். அது சம்மந்தமாக
சாமிக்கண்ணு படையாச்சியார் அப்போது முதல்வராக இருந்த
திரு, காமராஜர் அவர்களை சந்திக்க சென்றார் , அப்போது இவர் காமராஜ் அவ‌ர்களை பார்த்து
என்ன நாடாரே எப்படி இருக்கீங்க என்று கேட்க..!
காமராஜரும் நல்லா இருக்கேன் படையாச்சி நீங்க எப்படி இருக்கீங்க? என்ன திடீர் என்று வந்துள்ளீர்கள் என்றார்.
ஒன்றும் இல்லை இரண்டு மூன்று பள்ளிக்கு அனுமதி வேண்டும், எல்லோரும் உங்களை பார்க்க செல்கிறார்கள் என்றார்.
பின்னே நீர் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட மாட்டீரே? உம்ம இஷ்டத்திற்கு எல்லாம் செய்வதாக அதிகாரிகள் சொல்றாங்க என்ன பன்ன? என்றார் காமராஜர்.
உடன சாமிக்கண்ணு படையாச்சி எவன் சொன்னான் என் இஷ்டத்திற்கு நான்
செயல்படுகிறேன் என்று,
மக்கள் இஷ்டத்திற்குத்தான்
நான் செயல் படுகிறேன். மக்களுக்குத்தான் சட்டம், சட்டத்திற்காக மக்கள் இல்லை. சட்டம், கிட்டம் என்று பேசினால் சட்டையை கழட்டி விட்டு வாசலில் உட்கார்ந்து விடுவேன். என்று சட்டையை கழற்ற முயற்சி செய்ய
உடனே காமராஜர் யோவ் இருய்யா சட்டையெல்லாம் கழற்ற வேண்டாம் உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா.? 4, 5 நாளில் அனுமதி வரும் பத்திரமாக ஊருக்கு போய்யா என்று அனுப்பி வைத்தார். இப்படி நிறைய கூறலாம்.

இறுதியாக 1980 ஆரம்பத்தில் மாவ‌ட்ட ஆட்சியாளராக இருந்தவர் திருமதி, சந்திரலேகா அப்போது படையாச்சிக்கு வயது 89.
லெவி தரவில்லை என்று அவ‌ரது குடவனுக்கு சென்று சீல் வைத்து விட்டார் ஆட்சியர் சந்திரலேகா.

கேள்விப்பட்ட சாமிக்கண்ணு படையாச்சியார் சீலை உடைத்து விட்டு, ஆட்சியர் அலுவலகம் சென்று எனது இடத்தில் வந்தே சீல் வைக்கிறாயா என்று கேட்டு அங்கிருந்த நாற்காலியை எட்டி உதைத்து விட்டு சென்று
லெவி விலைக்கே தனது நெல்லை கானூர் மக்களுக்கே வாங்கினாராம்.
எப்படி இருந்தாலும் ஆட்டுக்கு
தோற்க்காது கிழப்புலி.
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதில்லை என்ற கண்ணதாசனின் பாடல்
வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர் கானூர். சாமிக்கண்ணு படையாச்சியார்.
                                        
................................................................

No comments:

Post a Comment