தமிழும் நானும்
- - - - - - - - - - - - - - - .
அம்மா என்று அகரத்தில் தொடங்கியது
என் முதல் வார்த்தை,
அது தமிழென்று தெரியாது?
நான் குழந்தையாய் இருக்கையிலே,
அனைத்து உறவுகளின் பெயர்களும்
மழலை சொற்களாய் பேசினேன்,
கொச்சையாகினும் மகிழ்ந்தால் என் அன்னை,
அதனை திருத்திக் கூறினேன்
உச்சி முகர்ந்தாள்.
மூன்றாம் வகுப்பிலே
முதல் வாழ்த்துப் பாடலை
மனப்பாடம் செய்திட்டேன்,
தமிழை என்னுள் செலுத்திட்டேன்
ஆசிரியர் அன்பாய் அரவணைத்தார்,
தமிழை பேசுகையில் பேராணந்தம்,
அதனை படிக்கையில் ஒரு பரம சுகம்
உணரும் போது மயிர் கூச்சலிடும்,
ஏதோ ஒரு வேட்கை உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ,
தமிழை நான் பேசுவதால் உயர்ந்ததா?
இல்லை, இல்லை,
அதனை வாசிக்கும் போது தான்
தாழ்ந்து கிடந்த
நான் உயர்ந்து போனேன்.
என் தாயை பிரிக்கலாம்,
என் உறவுகளை பிரிக்கலாம்,
என் சுக, துக்கங்களை பறிக்கலாம்,
ஏய்! காலனே
என் உயிர் தமிழை பிரிக்கத் தான் முடியுமோ?
உயிரை பிரித்தாலும்
நான் உள்வாங்கி வெளியிட்ட
என் சுவாசம்
என் கவியை, என் தமிழை
உன்னால் பிரிக்க முடியாது.
நகமும் சதையுமாய்
நானும் என் தமிழும்
உறவாடி வருகிறோம்,
எந்த மொழியாலும்
என்னை பிரிக்க முடியாது,
ஏனென்றால்
தமிழை தவிர வோறொன்றும் எமக்கு அறியாது!
தமிழே மூச்சென்று வாழ்கிறேன்,
என் பெயரை போற்றும் ஒரு நாள் தமிழகம்
அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,
தமிழ்ப் பாலை குடித்துவிட்டு உயிர் வாழ்கிறேன்,
என் உயிரை காலன் எடுத்தாலும்,
என் உடலை இந்த மண் தின்றாலும்
என் கவியை இந்த தமிழ் சுமக்கும்,
அன்றே என் ஆத்மா சாந்தியடையும்.
- - - - - - - - - - - - - -
அன்புடன் வீரா
No comments:
Post a Comment