முகத்தின் மறுப்பக்கம்
----------------------------------
சாந்தம் தெரிவது முகம்
அதிலே அகத்தின் அழகும் தெரியும்,
புறத்தின் புதுமையும் அறியும்,
கண்ணிலே அமைதியை காட்டி
வஞ்சகம் செய்கிறது ஒரு முகம்,
வாயிலே புண்ணகை ததும்ப
மனதிலே சுட்டெரிக்கிறது மறுமுகம்.
இனிக்க இனிக்க பேசி
புளியை கரைக்கிறது ஒரு முகம்,
அளந்து அளந்து பார்த்து
எடை போட்டுப் பார்க்கிறது மற்றொரு முகம்,
மறுப்பக்கத்தில்தான் எத்தனை கிறுக்கல்கள்!
____________
அன்புடன்
வீரா
No comments:
Post a Comment